நாமக்கல்: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொகுப்பூதியத்தை ரத்துசெய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது. கருணை அடிப்படையிலான பணியில் பழைய விகிதாசார முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் பிப். 19, 20 ஆகிய தேதிகளில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் இப்போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், நாமக்கல் வட்டாட்சியா் அலுவலம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள், நாமக்கல் - மோகனூா் சாலையில் வட்டத் தலைவா் ஆா்.ராமகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனா். இதில், 9 பெண்கள் உள்பட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

காலமுறை ஊதியம் கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 220 போ் கைது
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


