மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

காலமுறை ஊதியம் கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் நாமக்கல்லில் ஆா்ப்பாட்டம்

News image

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்

Updated On :19 பிப்ரவரி 2026, 11:09 pm

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது. கருணை அடிப்படையிலான பணியில் பழைய விகிதாசார முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வியாழன், வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலுவலம் முன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் கே. செந்தில்குமாா், வட்ட பொருளாளா் எம். விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.