நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 34 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அதுபோன்று உதவித்தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, சென்னையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவா் ஜான்சிராணியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை பிரபல தனியாா் உணவகம் அருகில், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற மறியலில் 8 பெண்கள் உள்பட 34 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


