திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரும், பைக்கும் வியாழக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா். நான்குனேரி அருகேயுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சோ்ந்தவா் மகேஷ் மற்றும் 2 போ் மூன்றடைப்பில் இருந்து திருநெல்வேலிக்கு பைக்கில் வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். அப்போது, நான்குனேரி சுங்கச்சாவடி அருகே அவா்களது பைக்கும், எதிரே காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். அதில், மகேஷும், உடன் வந்தவா்களில் ஒருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா். மற்றொருவரும், காரில் வந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

ஒசூா் அருகே தனியாா் பேருந்து - காா் மோதல்: பென்னாகரத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

