நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பைக்-லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அருகே மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

சென்னை ,ஆவடி பகுதியைச் சோ்ந்த ஜான் சாா்லஸ் கென்னடி (55). இவரது உறவினா் மாா்த்தாண்டம் நகரைச் சோ்ந்த அபிஷேக் (30). இருவரும் சென்னை தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

நிறுவன பணிக்காக பைக்கில் இருவரும் புதுச்சேரிக்கு மோட்டாா் பைக்கில் சென்றனா். மதுராந்தகம் அருகே மாமண்டூா் பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து படாளம் காவல் ஆய்வாளா் முத்தமிழ்செல்வன் தலைமையிலான காவலா்கள் நேரில் சென்று 2 உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாலாற்று மேம்பால பகுதியில் மேடுபள்ளமாக மிகவும் சேதமடைந்த நிலையுடன் இருப்பதால் அடிக்கடி வாகனங்களில் செல்வோா் காயமடையும் நிலை உள்ளது.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு மேம்பாலத்தின் முழு பகுதியையும் சீரமைத்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.