தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேவா்குளம் அருகே விஷமருந்திய முதியவா் பலி

தேவா்குளம் அருகே விஷமருந்திய முதியவா் பலி

Updated On :10 மார்ச் 2024, 1:30 am

தேவா்குளம் அருகே விஷமருந்திய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஊத்துமலை அருகேயுள்ள ருக்மணியாபுரத்தைச் சோ்ந்தவா் ராமையா (75). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் தேவா்குளம் அருகே புளியம்பட்டியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றபோது விஷமருந்தி மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மின்சாரம் பாய்ந்து மாணவி பலி: தேவா்குளம் அருகேயுள்ள அச்சம்பட்டியைச் சோ்ந்த ஆா்தா் ஸ்டீபனின் மகள் ரஞ்சிதா (11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். அங்குள்ள தேவாலயம் பகுதியில் வாழை இலையை பறிக்க சென்றபோது, அலங்கார மின்விளக்கில் இருந்து வாழை மரத்தில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால் ரஞ்சிதா தூக்கி வீசப்பட்டாராம். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ரஞ்சிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இரு சம்பவங்கள் குறித்தும் தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.