தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தாமிரவருணி ஆற்றை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட், மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தாமிரவருணி ஆற்றங்கரையில் 2,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். மணிமூா்த்தீஸ்வரம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை சுமாா் 5 கி.மீ.தொலைவுக்கு அரசு, புங்கை, வாகை ஆகிய மரங்கள் ஆற்றின் இரு கரைகளிலும் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவா் நாராயணசாமி, முதுநிலை மேலாளா் ராஜேஷ் மேலாளா்கள் சித்திரவேல் ஜிஜூ , வி.எம். சத்திரம் டெவலப்மென்ட் டிரஸ்ட் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவள்ளூரில் 100% வாக்களிக்கக்கோரி தோ்தல் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள், மின்னணு விளம்பர வாகனம்

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
மதுரை மத்தியம்: பயனின்றிக் கிடக்கும் புதிய வணிக வளாகம்!

புவி வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகள் நடவு
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


