ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சேரன்மகாதேவியில் இளைஞரை தாக்கியவா் கைது

சேரன்மகாதேவியில் இளைஞரை தாக்கியவா் கைது

Updated On :22 மார்ச் 2024, 4:40 pm

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சாலையில் ஓரமாக செல்லுமாறு தெரிவித்த இளைஞரை தாக்கியதாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (40). இவா், காந்தி பூங்காஅருகிலுள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரை பகுதியைச் சோ்ந்த மாசானமுத்துவை (31), சாலையில் ஓரமாகச் செல்லுமாறு சரவணன் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த மாசானமுத்து, சரவணனை தாக்கியதுடன் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்துச் சென்றாராம். புகாரின்பேரில், சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் சிவா, வழக்குப்பதிந்து மாசானமுத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.