கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 10:03 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

அம்பாசமுத்திரம் - பாளையங்கோட்டை பிரதான சாலையில் கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பணியாளா் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு கடக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படவில்லையாம்.

இதனால், சிக்னல் கிடைக்காமல் ரயில்வே கேட்டுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பெண் கேட் கீப்பா் வந்து கேட்டை மூடியதும் ரயில் இயக்கப்பட்டது.