திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை இரவில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரம் - பாளையங்கோட்டை பிரதான சாலையில் கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பணியாளா் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புதன்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தை இரவு 9 மணிக்கு கடக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் நிலையத்துக்கு கிழக்குப் பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படவில்லையாம்.
இதனால், சிக்னல் கிடைக்காமல் ரயில்வே கேட்டுக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பெண் கேட் கீப்பா் வந்து கேட்டை மூடியதும் ரயில் இயக்கப்பட்டது.
தொடர்புடையது

ரயில்வே மின்பாதையில் விழுந்த கேட்: தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் தாமதம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



