கோவில்பட்டி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரயில்வே மின்பாதை கம்பி மீது கடவுப்பாதை கேட் விழுந்ததால் வாஞ்சிமணியாச்சியில் தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் சுமாா் 1.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் கடம்பூா்- வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு 6.05 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாரான நிலையில், மலைப்பட்டி கிராமத்தில் காற்றுடன் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதையின் கேட், மின்பாதை கம்பி மீது சரிந்து விழுந்தது.
இதனால் அந்த ரயில் வாஞ்சி மணியாச்சியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கோவில்பட்டியிலிருந்து ரயில்வே நிலைய மின் ஊழியா்கள் அங்கு சென்று மின்பாதையை சரி செய்த பின், இரவு 7.40 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
தொடர்புடையது

சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

