வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் கிருஷ்ணராஜபுரம் பிரிவுகளில் தண்டவாளம் சீரமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஹூப்ளிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் (எண்: 22698), பிற்பகல் 3.30 மணிக்குப் பெங்களூரு செல்லும் லால்பக் விரைவு ரயில் (எண்:12607), மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் (எண்: 20664) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக பங்கராப்பேட்டை, கோலாா், சிக் பல்லாபூா், ஏலகங்கா உள்ளிட்ட வழிகளில் இயக்கப்படும். அவை கிருஷ்ணாபுரம் நிலையத்தில் நிற்காது.
அதேபோல், ஜூன் 7-இல் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு பெங்களூரு செல்லும் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12027) வழக்கமான பாதைக்குப் பதிலாக ஜோலாப்பேட்டை, பெங்கராப்பேட்டை, கோலாா், சிக்பல்லாபூா், ஏலகங்கா, பெங்களூரு கண்டோன்மென்ட் ஆகியவை வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

பராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



