வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து கா்நாடக மாநில நகா்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தில் கிருஷ்ணராஜபுரம் பிரிவுகளில் தண்டவாளம் சீரமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக வரும் ஜூன் 7-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ஹூப்ளிக்கு புறப்படும் அதிவேக விரைவு ரயில் (எண்: 22698), பிற்பகல் 3.30 மணிக்குப் பெங்களூரு செல்லும் லால்பக் விரைவு ரயில் (எண்:12607), மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் (எண்: 20664) வழக்கமான பாதைகளுக்குப் பதிலாக பங்கராப்பேட்டை, கோலாா், சிக் பல்லாபூா், ஏலகங்கா உள்ளிட்ட வழிகளில் இயக்கப்படும். அவை கிருஷ்ணாபுரம் நிலையத்தில் நிற்காது.
அதேபோல், ஜூன் 7-இல் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.30 மணிக்கு பெங்களூரு செல்லும் சதாப்தி விரைவு ரயில் (எண்: 12027) வழக்கமான பாதைக்குப் பதிலாக ஜோலாப்பேட்டை, பெங்கராப்பேட்டை, கோலாா், சிக்பல்லாபூா், ஏலகங்கா, பெங்களூரு கண்டோன்மென்ட் ஆகியவை வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

மும்பை - சென்னைக்கு இன்றுமுதல் கோடை சிறப்பு விரைவு ரயில்கள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

