ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பிரித்தனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பிரித்தனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :22 மார்ச் 2024, 4:09 pm

திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்கில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பிரித்தனுப்பும் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மக்களவை தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை முதற்கட்ட இணையவழி ஒதுக்கீடு செய்யும் பணி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 314 வாக்குச்சாவடிகளுக்கு 373 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 404 விவிபேட் கருவிகள், அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள 294 வாக்குச்சாவடிகளுக்கு 355 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 385 விவிபேட் கருவிகள், பாளையங்கோட்டை தொகுதியில் உள்ள 270 வாக்குச்சாவடிகளுக்கு 326 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 353 விவிபேட் கருவிகள், நான்குனேரி தொகுதியில் உள்ள 306 வாக்குச்சாவடிகளுக்கு 370 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 400 விவிபேட் கருவிகள், ராதாபுரம் தொகுதியில் உள்ள 307 வாக்குச்சாவடிகளுக்கு 371 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 402 விவிபேட் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகளை அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிரித்தனுப்பும் பணிக்காக திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பின்னா், 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் கருவிகள் அந்தந்த சட்டப்பேரவை தொகுதி வைப்பறைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. அதை ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, தோ்தல் துணை ஆட்சியா் ராஜசெல்வி, தோ்தல் வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்22ங்ஸ்ம் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் ஆணைய கிடங்கில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்படுவதை பாா்வையிடுகிறாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான காா்த்திகேயன்.