ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கடையம் அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடையம் அருகே ரூ. 3 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

News image
Updated On :22 மார்ச் 2024, 4:14 pm

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காரில் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைதுசெய்தனா். ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பா்னபாஸ் உத்தரவின்பேரில், தனிப்படையினா் கடையம் அருகேயுள்ள மேலப்பரும்பு பகுதியில் ரோந்து சென்றனா். அவ்வழியே காரில் வந்த ஆலங்குளத்தைச்சோ்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன் (32) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தாராம். காரில் தடை செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் மூட்டைகளை அவா் கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்கள், காரை பறிமுதல் செய்தனா்.