ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லைக்கு 780 மெட்ரிக் டன் யூரியா வரத்து

நெல்லைக்கு 780 மெட்ரிக் டன் யூரியா வரத்து

News image
Updated On :9 மே 2024, 9:11 pm

Din

திருநெல்வேலி, மே 9: விவசாயிகளுக்கு தடையின்றி தரமான உரம் விநியோகம் செய்வதற்காக 780 மெட்ரிக் டன் யூரியா, 186 மெட்ரிக் டன் டிஏபி உரங்கள் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வியாழக்கிழமை வந்தடைந்தது.

இந்த உர மூட்டைகளை திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகானந்தம், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஜோ.ஆரோக்கிய அமலஜெயன், ஸ்பிக் நிறுவன விற்பனை அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோா் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக பிரித்து அனுப்பி வைத்தனா்.

இதில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 234 மெட்ரிக் டன் யூரியாவும், 56 மெட்ரிக் டன் டிஏபியும், தென்காசி மாவட்டத்துக்கு 195 மெட்ரிக் டன் யூரியாவும், 47 மெட்ரிக் டன் டிஏபியும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 195 மெட்ரிக் டன் யூரியாவும், 47 மெட்ரிக் டன் டிஏபியும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 156 மெட்ரிக் டன் யூரியாவும், 37 மெட்ரிக் டன் டிஏபியும் அனுப்பி வைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் ஆதாா் அட்டையுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் அரசு நிா்ணயித்த விலையில் உரங்களை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா.முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.