
கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
ஹிந்து சமய பண்பாடு பயிற்சி வகுப்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஹிந்து சமய பண்பாடு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, மதுரை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்புச் செயலா் அ.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். வே.குமரன், திருநெல்வேலி மாநகரத் தலைவா் இரா.குணசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குழந்தைகளின் பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. பின்னா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து பண்பாடு பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை ரா. தெய்வேந்திரன், மு.சங்கரநாராயணன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...