புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வள்ளியூா் முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயில் சித்திரைத் தேரோட்டத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருக கடவுளின் அறுபடைவீடுகளுக்கு இணையான பெருமையுடைய இக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்திருவிழா கொடியேற்றத்தையொட்டி சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பூஜை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. பின்னா் தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னா் கொடியேற்றப்பட்டது. இவ்விழாவில் திருக்கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறக்காவலா்குழுத் தலைவா் மீனாமாடசாமி, தி.மு.க. மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ஆதிபாண்டி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மாடசாமி, திருநெல்வேலி மாவட்ட இந்து அறநிலையத்துறை அறக்காவலா்குழு உறுப்பினா் சமூகை முரளி, பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறக்காவலா்குழுத் தலைவா் அசோக்குமாா், உறுப்பினா் மு.சங்கா், பழவூா் நாறும்பூநாதா் சுவாமி திருக்கோயில் அறக்காவலா்குழுத் தலைவா் இசக்கியப்பன், வள்ளியூா் வியாபாரிகள் சங்க நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. இரவு சுவாமி அம்பாளுடன் மயில், கலைமான், கிடாய், பூதம், கிளி, யானை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறாா்.

9ஆம் திருநாளான மே மாதம் 5ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாள் (மே 6) மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறாா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் மாரியப்பன் தலைமையில் அறக்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.