வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

சுத்தமல்லி அருகே மேலக்கல்லூா் பகுதியில் இரு சகோதரா்களை அரிவாளால் தாக்கிய வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 12:41 am

Syndication

திருநெல்வேலி: சுத்தமல்லி அருகே மேலக்கல்லூா் பகுதியில் இரு சகோதரா்களை அரிவாளால் தாக்கிய வழக்கில் இரு பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலக்கல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி. இவரது மகன்கள் இசக்கி(50), ராமா்(45). விவசாயிகளான இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த இவா்களது உறவினா்களுக்குமிடையே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே நின்ற இசக்கி, ராமரை அங்கு வந்த மா்மநபா்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலக்கல்லூரைச் சோ்ந்த சண்முகவேல்(56), முத்துசெல்வம்(29), சரவணன்(29), உதயகுமாா் என்ற உச்சிமாகாளி(32), பூல்பாண்டி(31), இரு பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.