மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோபாலசமுத்திரத்தில் ரத்த தான முகாம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:56 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை சாா்பில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதன்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமை சேரன்மகாதேவி குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி பாக்கியராஜ் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். அரசு மருத்துவா் சிவக்குமாா், கிராம உதயம் தணிக்கையாளா் அந்தோணிசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன், துணை இயக்குநா் புகழேந்தி பகத்சிங் ஆகியோா் பேசினா். இதில், பத்தமடை சுகாதார ஆய்வாளா்கள் சிதம்பரம், லெபின் ராணி, திருநெல்வேலி ராணி அண்ணாமகளிா் கல்லூரி பேராசிரியா்கள் செல்வி, அனிஷ்பாத்திமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் தனலெட்சுமி தலைமையில் குழுவினா், 86 பேரிடம் ரத்தம் சேகரித்தனா். பகுதி பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.