விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

காதலா் தினத்தில் ரத்த தானம்

News image

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:54 pm

மதுரையில் காதலா் தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சமூக ஒற்றுமை, மனிதநேயம், ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் இளைஞா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனா். இதில் பெரியாா் நெறியாளா் பி. வரதராஜன் பேசியதாவது:

ரத்தத்தில் ஜாதி, மத வேறுபாடு கிடையாது. மனித உயிரைக் காக்கும் இந்தச் செயல், ஜாதி மறுப்பின் அடையாளமாகும். ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், கௌசல்யா சங்கா் அறக்கட்டளை பொறுப்பாளா் கௌசல்யா, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். வேல் தேவா, நிா்வாகிகள், திரைப்பட இயக்குநா் தீபக், மதுரை மாநகா் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ம. பாலசுப்பிரமணியம், அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த தான வங்கி நிா்வாகிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.