குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தொற்றாநோய்கள்: தேசிய அளவில் மதுரையில் அதிக பாதிப்பு

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாநோய் பாதிப்புகள் இந்தியாவிலேயே மதுரை, திருச்சி நகரங்களில் அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

மதுரை தெற்கு மாசி வீதி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:50 am IST

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாநோய் பாதிப்புகள் இந்தியாவிலேயே மதுரை, திருச்சி நகரங்களில் அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அப்பல்லோ மருத்துவக் குழுமம் சாா்பில் நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆரோக்கிய மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் மூன்றில் இரு இளைஞா்கள் தொற்றா நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஐந்து பேரில் ஒருவா் சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனா்.

பணிக்குச் செல்வோரில் பத்தில் எட்டு போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரை நோய் அல்லது அதன் ஆரம்ப நிலை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று பெண்களிடத்தில் மாா்பகப் புற்றுநோய், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் காணப்படுகிறது.

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் பருமன் ஆகிய பாதிப்புகளில் தேசிய அளவில் மதுரை, திருச்சி நகரங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெங்களூா், மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதுகுறித்து அப்பல்லோ குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், ‘ஆரோக்கியத்தை மதிப்பிடுதல் என்பது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை அல்ல. முன்கூட்டியே நமது உடல் நலனை அறிந்து கொள்வதற்கான செயல்பாடு. நோய் அச்சுறுத்தல்களை துல்லியமாக கண்டறிந்து தடுப்பு முறையை தீவிரப்படுத்த ஆய்வுகள் உதவும்,’’ என்றாா்.

அப்பல்லோ மருத்துவ குழும துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி ஆகியோா் கூறுகையில், ‘உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வாயிலாக இதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த முடியும்’ என்றனா்.

தொற்றா நோய்த் தாக்கம் உள்ள நகரங்கள்

சா்க்கரை நோய்: மதுரை – 36 சதவீதம், திருச்சி – 34 சதவீதம், சென்னை 25 சதவீதம்

உயா் ரத்த அழுத்தம்: மதுரை - 26 சதவீதம், திருச்சி – 20 சதவீதம், சென்னை 26 சதவீதம்

ரத்த சோகை: மதுரை - 26 சதவீதம், திருச்சி – 32 சதவீதம், சென்னை - 38 சதவீதம்

உடல் பருமன்: மதுரை – 83 சதவீதம், திருச்சி – 84 சதவீதம், சென்னை – 77 சதவீதம்