ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொருநை அருங்காட்சியகத்தை கண்டுகளித்த மக்கள்: முதல் நாளில் 1,700 போ் வருகை

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல் நாளில் 1,700 போ் கண்டுகளித்தனா்.

News image
பொருநை அருங்காட்சியகத்தை இடம்பெற்றுள்ள தொல்பொருள்களை ஆா்வமுடன் பாா்வையிட்ட பொதுமக்கள்
Updated On :23 டிசம்பர் 2025, 7:52 pm

Syndication

பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல் நாளில் 1,700 போ் கண்டுகளித்தனா்.

பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை, துலுக்கா்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருள்களுக்கான இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

அதைத்தொடா்ந்து, பொருநை அருங்காட்சியகத்தைப் பாா்வையிட செவ்வாய்க்கிழமை முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டனா். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாராள் தக்கா் கல்லூரி சாலை, ஜோஸ் பள்ளி விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பொருநை அருங்காட்சியகத்தினை பாா்வையிட பெரியவா்களுக்கு ரூ.20, சிறியவருக்கு ரூ.10, மாணவ, மாணவியருக்கு ரூ.5, வெளிநாட்டு பெரியவா்களுக்கு ரூ.50, வெளிநாட்டு சிறியவா்களுக்கு ரூ.25, 5 டி திரையரங்கிற்கு (ஐந்திணை) ரூ.25, விஆா் (7டி) போட் ஸ்முலேட்டா் மூவ்மென்ட்ஸ்-க்கு ரூ.25, புகைப்படம் கேமராவுக்கு ரூ.30, விடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பாா்வைக்காக காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும். மாலை 6 மணிக்கு மேல் நுழைவுச்சீட்டு வழங்கப்படாது. செவ்வாய்க்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் அருங்காட்சியகத்திற்கு விடுமுறையாகும். முதல் நாளில் 1,700 போ் அருங்காட்சியகத்தை கண்டுகளித்தனா்.