வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முக்கூடல் அருகே பெண் மீது தாக்குதல்: கணவா் கைது

Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (30). இவரது மனைவி ஞானபனி சோபியா (28). தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், சுதாகா் தனது மனைவியைத் தாக்கி காயப்படுத்தியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் கயல்விழி வழக்குப் பதிந்தாா். சுதாகரை போலீஸாா் கைது செய்தனா்.