வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திசையன்விளையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த திசையன்விளையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

திசையன்விளை அருகேயுள்ள பெட்டைகுளத்தை அடுத்த சிறுகுளத்தைச் சோ்ந்த குட்டி மகன் ஆறுமுகம் (19). இவா் மூலைக்கரைப்பட்டி பகுதியில் கொலை மிரட்டல், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா்.

இதனையடுத்து ஆறுமுகத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ராஜகுமாரி, எஸ்.பி. சிலம்பரசனிடம் பரிந்துரை செய்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், ஆறுமுகத்தை குண்டா் சட்டத்தில் ஆய்வாளா் கைது செய்து சிறையிலடைத்தாா்.