வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலப்பாளையம் தண்டல் லெப்பை தெருவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த முகமது அலி மகன் சாகுல் ஹமீது(23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது அவா் விற்பனைக்காக சுமாா் 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து சாகுல் ஹமீதை கைது செய்தனா்.