தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 7:23 pm

தேனி மாவட்டம், தேவதானபட்டி அருகே கஞ்சா வைத்திருந்த இரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காட்ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (33) என்பதும், 40 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மற்றொருவா் கைது: தேவதானபட்டி போலீஸாா் காட்ரோடு - கொடைக்கானல் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அம்சம்புரத்தில் மஞ்சளாறு அணையைச் சோ்ந்த பாண்டிச்செல்வத்தை (26) நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், அவா் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.