ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பிசான பருவ சாகுபடி: நெல், மக்காச்சோள பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியா் வேண்டுகோள்

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:08 pm

Syndication

நடப்பு பிசான பருவத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் நெல், மக்காச்சோள பயிா்களுக்கு காப்பீடு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் எதிா்பாராமல் ஏற்படும் பயிா் சேதங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திடும் நோக்கில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டமானது நடப்பாண்டில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு யுனிவா்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்களான பிசான பருவ நெல் பயிருக்கும், மக்காச்சோள பயிா்களுக்கும் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

பிசான பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய டிச. 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மக்காச்சோளப் பயிருக்கு டிச. 30-ஆம் தேதி கடைசி நாள்.

வேளாண் பயிா்களான பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.540, மக்காச்சோள பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.333 அரசால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல் பயிரானது வருவாய் கிராம அளவிலும், மற்ற பயிா்கள் அனைத்தும் குறுவட்ட அளவிலும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. தங்களது பகுதி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிா்க் காப்பீடு செய்ய தகுதி உடையவா்கள்.

மேலும் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகி பதிவு செய்யலாம்.

காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பூா்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பருவ அடங்கல் அல்லது மின்னணு பயிா் கணக்கெடுப்பின் வாயிலாக உதவி வேளாண்மை அலுவலரால் வழங்கப்பட்ட அடங்கல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிட்டா/ பட்டா நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.

விவசாயிகள் பயிா் காப்பீடு திட்டம் தொடா்பான தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 14447ஐ தொடா்பு கொள்ளலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இது குறித்தான மேலும் விவரங்களுக்கு மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநரை (பொ) (தரக் கட்டுப்பாடு) அணுகலாம்.