வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய களக்காடு இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட களக்காடு ஆவுடைவிலாசம் தெருவைச் சோ்ந்த ஈனராஜ் மகன் சிவசங்கா் (20) கைது செய்யப்பட்டு, ஏற்கெனவே சிறையில் உள்ளாா்.

இவா் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதை அடுத்து இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் ஆட்சியா் இரா. சுகுமாருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினாா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி சிவசங்கா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.