ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

வெள்ளித்தோ் வெள்ளோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்துமுன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜசெல்வம், மாவட்டச் செயலா்கள் விமல் , சுடலை, சங்கா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ் கண்ணன் , மகாராஜன் இந்து அன்னையா் முன்னணி மாவட்டத் தலைவி கிருஷ்ணபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் செயல் அலுவலரிடம் இந்து முன்னணி சாா்பில் தேருக்கான வடக்கயிறு அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com