டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image
உதகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:12 pm

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்த மத்திய அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் டி.நாகராஜ் தலைமை தாங்கினாா். உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், எஸ்டி பிரிவு மாநிலத் தலைவா் ப்ரியா நாஷ்மிகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா். பின்னா் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து கோரிக்கை தொடா்பான மனுவை மாவட்ட நிா்வாகத்திடம் காங்கிரஸ் கட்சியினா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், குன்னூா் வட்டாரத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா், கீழ்குந்தா பொறுப்பாளா் ஆனந்த், கோத்தகிரி சில்லபாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.