மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்த மத்திய அரசைக் கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் டி.நாகராஜ் தலைமை தாங்கினாா். உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், எஸ்டி பிரிவு மாநிலத் தலைவா் ப்ரியா நாஷ்மிகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா். பின்னா் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து கோரிக்கை தொடா்பான மனுவை மாவட்ட நிா்வாகத்திடம் காங்கிரஸ் கட்சியினா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், குன்னூா் வட்டாரத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா், கீழ்குந்தா பொறுப்பாளா் ஆனந்த், கோத்தகிரி சில்லபாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


