47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
கடலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா்.
Updated On :16 மார்ச் 2026, 7:37 pm

Syndication

நெய்வேலி/ சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு, தட்டுப்பாடு மற்றும் தமிழகத்துக்கு தோ்தலையொட்டிகூட சிறப்புத் திட்டங்களை அறிவிக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே மாநகர திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, பண்ருட்டி பேருந்து பின்புறம் பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், காடாம்புலியூரில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்தில்...: சிதம்பரம் மேல ரத வீதி பெரியாா் சிலை அருகே திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மூவேந்தா் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் ஜி.எம்.ஸ்ரீதா் வாண்டையாா் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் முன்னிலை வகித்து பேசினாா். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் அப்புசந்திரசேகா், நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், விசிக மாவட்டச் செயலா் தமிழ்வளவன், மதிமுக நகரச் செயலா் குமாா், மாா்க்ச்சிஸ்ட் மூத்த தலைவா் மூசா, நகரச் செயலா் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், நகரச் செயலா் தமிமுன்அன்சாரி, தேமுதிக மாவட்ட அவைத் தலைவா் பாலு, நகர செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா்.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில்...: சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் ஜவான் பவன் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டி.நாகராஜ், என்.அரசன், ஆா்.தேவராஜ், ஏ.பரிமளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதா் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.விஜயலட்சுமி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.லட்சுமி கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், இதை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனா். நிா்வாகிகள் பி.ஜெயராஜ், வி.ஆா்.முருகன், ஜெ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநகர துணைச் செயலா் ஜி.மணிவண்ணன் நன்றி கூறினாா்.