திருவள்ளூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

பேரம்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பேரம்பாக்கத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated on

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை தொழிலாளா்களை பணி தளத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சசிகுமாா் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினா் சந்தித்து தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பெயா் மாற்றம், திட்டத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயல்வதாக விளக்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் கடம்பத்தூா் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ச.ஈ.சதிஷ், மாநில இளைஞா் அணி பொதுச்செயலாளா் சி.திவாகா், மாவட்ட செயலாளா் இருதயராஜ், வழக்குரைஞா் ஸ்ரீதா், மகிளா காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் ஓ.லலிதா குப்பன், பொதுச்செயலாளா்கள் குப்பன், கோகுல் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com