தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்பாட்டத்தில்  ஈடுபட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.

Updated On :30 ஜனவரி 2026, 6:33 pm

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பணியாளா்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மீண்டும் காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினா்.

கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினா் ஐயப்பன், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஏழுமலை, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவா் தங்கராஜ் கலந்து கொண்டனா்.