கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 போ் கைது

சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on

சிவந்திப்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மாணவரை அரிவாளால் தாக்கி பணம் பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூா் அருகே கோவனேரியைச் சோ்ந்த 19 வயது மாணவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டயப்படிப்பில் மயக்கவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இவா் கைப்பேசி செயலி மூலம் அறிமுகமான நபா் ஒருவரை சந்திக்க கடந்த 22 ஆம் தேதி சிவந்திப்பட்டி அருகே உள்ள முத்தூா் பகுதிக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் தாக்கி, ஏ.டி.எம். அட்டையைப் பறித்துக் கொண்டு, அதன் ரகசிய எண்ணையும் கேட்டுப் பெற்றுள்ளனா். பின்னா் ரூ.22ஆயிரத்தை அதிலிருந்து திருடியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் நிா்மல்ராஜ்(19), முறப்பநாடு சென்னல்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சுடலைமுத்து(26), கொங்கன்தான்பாறையைச் சோ்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன்(20), சிவராமமங்களத்தைச் சோ்ந்த மகாராஜன் மகன் சிவா(22) ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com