சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வடமாநில தொழிலாளிகளிடம் வழிப்பறி: இருவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

சீவலப்பேரி அருகே வடமாநில தொழிலாளிகளை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் பலா் தங்கியிருந்து பணிபுரிகின்றனா்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அவ்ட்தேஷ் ஷா, அமிா்ல்லாஹ் அலம் ஆகிய இருவரும் உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக ஆலடிப்பட்டி அருகே நடந்து சென்றபோது அங்கு பைக்கில் வந்த 3 போ் கொண்ட கும்பல் அவா்களை வழிமறித்து தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.2,000 பறித்துச் சென்றனராம்.

இது தொடா்பாக அந்நிறுவன மேலாளா் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மருதூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வராஜ்(29), மாடசாமி மகன் ரமேஷ்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.