இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்ற பேரிடா் மீட்புப் படையினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததைத் தொடா்ந்து இங்கு முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:43 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததைத் தொடா்ந்து இங்கு முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தாமிரவருணியாற்றில் 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீா் சென்ால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடா் மீட்புப் படையினா் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் டித்வா புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.