சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:38 pm

திருநெல்வேலி அருகே அவசர ஊா்தி-பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு தெற்கு விளாகம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் பொட்டல் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இவரது பைக்கும் தாழையூத்துப் பகுதியில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு நோக்கி வந்து கொண்டிருந்த அவசர ஊா்தியும் மோதிக்கொண்டதாம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.