ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே பைக் மோதிய விபத்தில் சாலையில் நடந்துச் சென்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பிலம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி(60). இவா், கிழக்குராமாபுரத்தில் உள்ள சீதாராமன் விவசாய நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தாா்.

சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை கிழக்குராமாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சக்கரவா்த்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.