தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:08 am IST

திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், சந்திப்பு பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன்(59) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.