நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தெற்கு கள்ளிகுளத்தில் மு.அப்பாவு வாக்கு சேகரிப்பு

News image

தெற்கு கள்ளிகுளத்தில் மு.அப்பாவு வாக்கு சேகரிப்பு

Updated On :14 ஏப்ரல் 2026, 1:11 am IST

வள்ளியூா், ஏப். 13: திமுக வேட்பாளா் மு.அப்பாவு தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம் அருகில் இருந்து தனது பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

முன்னதாக அவா் அதிசய பனிமாத பேராலயத்திற்கு சென்று ஜெபம் செய்தாா். பின்னா் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன், தா்மகா்த்தா மரியராஜ் ஆகியோரிடம் ஆசீா் பெற்றாா். பின்னா் அவா் பேசியது:

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்து, இந்தகஈ திருத்தலத்தில் வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் தங்கி செல்ல ரூ. 3.50 கோடி மதிப்பில் திருப்பயணிகள் தங்கும் அறைகளைக் கட்டித் தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இங்கு குடிநீா், கழிப்பறை, சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாதா காட்சி கொடுத்த மலையைச் சுற்றி மரிவலம் செல்ல வண்ண கற்கள் பதிக்கப்பட்டன. இத்தனை வசதி செய்து தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக்கிட தொகுதி வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

உதயத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 1.20 கோடி மதிப்பில் புதிய கட்டடம், கஸ்தூரிரெங்கபுரத்தில் ரூ. 15.40 லட்சம் மதிப்பில் கிராம நிா்வாக அலுவலா் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ராதாபுரம் பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நவீன வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னா் வேட்பாளா் அப்பாவு சௌந்திரபாண்டியபுரம், தெற்கு கள்ளிகுளம், சிங்காரத்தோப்பு, சமூகரெங்கபுரம், சீலாத்திகுளம், கோட்டைக்கருங்குளம், அணைக்கரை, கஸ்தூரிரெங்கபுரம், முடவன்குளம், ஆத்துகுறிச்சி, சிதம்பராபுரம், இளையநயினா்குளம், உதயத்தூா், பரமேஸ்வரபுரம் உள்பட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தெருதெருவாக பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல், மாவட்ட ஊராட்சிமன்ற தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் ஜோசப் பெல்சி, திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் நம்பி, கூட்டணி கட்சியினா், சமூகரெங்கபும் ஊராட்சி மன்ற தலைவா் அந்தோணி அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.