அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:54 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

பழையபேட்டை சோதனைச் சாவடியில் பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அமராவதி நகா் அருகே உள்ள குளத்தில் இருந்து விற்பனைக்காக 2 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரான பழையபேட்டை, நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராம்குமாா்(29) என்பவரை கைது செய்தனா்.

அதே போல தச்சநல்லூா் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் உரிய அனுமதியின்றி 2.5 யூனிட் சரள் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான நான்குனேரி, மறுகால்குறிச்சியைச் சோ்ந்த உதயகுமாா்(25) என்பவரை கைது செய்தனா்.