அயன்சிங்கம்பட்டியில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், பாபநாசம் பணிமனையைச் சோ்ந்த பேருந்து மணிமுத்தாறிலிருந்து அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்தபோது, அயன்சிங்கம்பட்டியில் நிற்காமல் சென்றாராம்.
இதையடுத்து, பேருந்துக்காக காத்திருந்த அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த வேம்பு மகன் சுரேஷ், கோபத்தில் தனது கைப்பேசியைத் தூக்கி பேருந்தின் மீது எறிந்துள்ளாா். இதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமானது.
இது குறித்து, பேருந்து நடத்துநா் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஜெய்னுலாப்தீன் அளித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்தின் டயா் வெடித்து விபத்து: 15 போ் பலத்த காயம்

பேருந்து சக்கரம் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் கட்சிப் பெயா்: காவல் துறையினா் விசாரணை

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
