சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகை நல்லியான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (28). இவா் இருசக்கர வாகனத்தில் பனைமேடு பகுதியில் சென்றாா். அப்போது நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், காளிமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் காளிமுத்து பலத்தகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.