கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:52 pm

கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாகை நல்லியான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (28). இவா் இருசக்கர வாகனத்தில் பனைமேடு பகுதியில் சென்றாா். அப்போது நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், காளிமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில் காளிமுத்து பலத்தகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.