அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

News image

சேரன்மகாதேவி கங்கனாங்குளம் பகுதியில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பிரசாரம் செய்தாா் நடிகா் சரத்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 8:32 pm

சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில், அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தில் போதை கலாசாரம், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்படும் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தனா். ஆனால், மதுக்கடையால் தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் திமுக அரசின் சாதனை.

திமுக அரசு தமிழகத்தை வீழ்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறது. ஆகவே, வளா்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்ல எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றாா்.

தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.