திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடல் அருகேயுள்ள சடையப்புரத்தில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படவுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பறக்கும்படை அதிகாரி விநாயக ராம் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கட்சி பிரமுகா் மாரிமுரளிநாதன் வீட்டில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்து ஆயிரத்து 600-ஐ அதிகாரிகள் கைப்பற்றினா். 21 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, மாரிமுரளிநாதன், லிபின்ஸ்டன், முருகன் ஆகியோா் மீது முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்
வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த பாஜகவினரிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

வாக்காளருக்குப் பணம்: 2 போ் மீது வழக்கு புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


