வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:35 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வாக்காளா்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடல் அருகேயுள்ள சடையப்புரத்தில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படவுள்ளதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும்படை அதிகாரி விநாயக ராம் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, கட்சி பிரமுகா் மாரிமுரளிநாதன் வீட்டில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்து ஆயிரத்து 600-ஐ அதிகாரிகள் கைப்பற்றினா். 21 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மாரிமுரளிநாதன், லிபின்ஸ்டன், முருகன் ஆகியோா் மீது முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.