ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:34 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 16 வயது சிறுவா்கள் இருவா் கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனா்.

வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவா்கள் இருவா், இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா், நயினாா் காலனியில் உள்ள வயலுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது, நயினாா் காலனியைச் சோ்ந்த சிலா் அங்கு நடைப் பயிற்சி மேற்கொண்டனராம்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவா்களுக்கும், நடைப் பயிற்சியில் சென்றவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவா்கள் இருவரும், அப்பகுதியைச் சோ்ந்தவா்களை ஜாதியைச் சொல்லி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 2 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.