திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்தின் வழித்தட பலகையில் கட்சிப் பெயரை வைத்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு அரசு பேருந்தின் வழித்தட பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என்று மாற்றப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகிறாா்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள 7டி தடப் பேருந்தின் பின்பகுதி வழித்தட பலகையில் மா்மநபா்களால் கடந்த 16.4.2026இல் தமிழக வெற்றிக் கழகம் என காட்சிப்படுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட காவல் துறை அலுவலரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டு அதற்கான மேல் நடவடிக்கை எடுக்க கோரி சிஎஸ்ஆா் நகல் பெறப்பட்டது. மேலும், அந்தப் பலகை சரிசெய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது.
ஆனால், சமூக வலைத்தளங்களில் திங்கள்கிழமையும் அதேபோல் இயங்குவதாக சிலா் பரப்பியுள்ளனா். ஆய்வில் அது உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 9.85 லட்சம் வாக்குகள் பதிவு
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

பயணிகள் பாதுகாப்புக்காக மாற்றம் பெறும் நீல வழித்தட மெட்ரோ ரயில்கள்!

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


