மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:35 pm

பாளையங்கோட்டையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில் இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை புதுபேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (24). இவா், கடந்த 23 ஆம் தேதி பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தபோது, முன்விரோதம் காரணமாக சிலா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து செய்து 5 பேரை தேடி வந்தனா். அவா்களில் சமாதானபுரத்தை சோ்ந்த கௌதம் சரவணன் (22), வி.எம்.சத்திரத்தை சோ்ந்த ராஜேஷ் (22) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.