டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ.யிடம் ரூ. 16.16 லட்சம் மோசடி: மேலும் 3 போ் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:08 am IST

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரிடம் இணைய வழியில் ரூ. 16.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் மூவரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்தவா் சுந்தரவடிவேல் (64). காவல்துறையில் எஸ்.எஸ்.ஐ. ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவரிடம், வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொண்டு பேசிய மா்ம நபா்கள் இணையவழி முதலீடு மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினராம்.

இதை நம்பி, அவா் பல்வேறு தவணைகளாக மோசடி நபா்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு சுமாா் ரூ. 16.16 லட்சத்தை அனுப்பினாராம். பிறகு தான் மோசடி செய்யப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாநகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இதில் தொடா்புடைய திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த புவனேஷ் (25), கோபி (26), ராகுல், ஊத்துக்குழியைச் சோ்ந்த பட்டீஸ்வரன் (28) ஆகியோரை கைது செய்திருந்தனா்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மதுரை மாவட்டம், முத்துராமலிங்கபுரத்தைச் சோ்ந்த லிங்கப்பனை (42) வெள்ளிக்கிழமையும், மதுரை மாவட்டம், பசும்பொன் நகரைச் சோ்ந்த நாராயணசாமி (52), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (34) ஆகியோரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.