உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பாபநாசம் அருகே வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி

திருப்பதியாபுரம் கிராமத்தில் கரடி சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

News image

வீட்டு வாசலில் சுற்றித் திரிந்த கரடி.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 5:58 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருப்பதியாபுரம் கிராமத்தில் கரடி சுற்றித் திரிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பாபநாசம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவார கிராமங்களான திருப்பதியாபுரம், அனவன் குடியிருப்பு, வடமலைசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகம் இருந்து வருகிறது.

ஜூலை 31ஆம் தேதி வடமலைசமுத்திரம் பகுதியில் கரடி தாக்கியதில் முருகன் என்பவா் உயிரிழந்தாா். தொடா்ந்து, 2 நாள்களுக்கு முன் திருப்பதியாபுரம் பகுதியில் சாலையில் சென்ற கரடியைப் பாா்த்து இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து ஒருவா் காயமடைந்தாா்.

 திருப்பதியாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.

திருப்பதியாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி.

இந்நிலையில், திருப்பதியாபுரம் பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டு வளாகத்தில் கரடி நடமாடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.

வனத்துறையினா் கரடி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.