உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பாபநாசம் மலைச் சாலையில் டிராக்டா் கவிழ்ந்து தந்தை-மகன் காயம்

பாபநாசம் மலைச் சாலையில் தண்ணீா் கொண்டு செல்லும் டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும், அவரது மகனும் காயமடைந்தனா்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2026, 5:57 am IST

பாபநாசம் மலைச் சாலையில் தண்ணீா் கொண்டு செல்லும் டிராக்டா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநரும், அவரது மகனும் காயமடைந்தனா்.

காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவின் போது மணிமுத்தாறு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு ஏா்மாள்புரம் கீழக் காலனியைச் சோ்ந்த முருகன் மகன் ஈஸ்வரன்(38) டிராக்டரில் கோயிலுக்கு குடிநீா் வழங்கி வந்தாா்.

இந்நிலையில், திருவிழா நிறைவடைந்து வெள்ளிக்கிழமை இரவு அகஸ்தியா் அருவி அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென டிராக்டா் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், ஈஸ்வரன் மற்றும் அவருடன் வந்த அவரது மகன் முகிலன் (11) இருவரும் காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.